மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

ஒளவை

பரவசம்
=======
மயங்கும் மாலை மனதை வருட
பயங்கள் மறந்த பதமான பொழுது
இயற்கை அழகில் இதயம் மிதக்க
சயனம் தாலாட்ட சந்தோச பரவசம்

முழுநிலா வானில் மெய்மறந்த வேளை
பழுதில்லா நிலவைப் பார்த்து இரசிக்கையில்
தொழுகின்ற கடவுளாய்த் தோன்றும் உருவுடன்
அழுவதும் சிரிப்பதும் ஆனந்த பரவசம்

தென்றல் காற்று தேகம் தீண்ட
இன்ப ஊற்று இதமாய்த் தூண்ட
அன்பு உள்ளம் அருகில் இருக்க
தன்னை மறந்து தங்கும் பரவசம்

அலைகள் கரையை அடித்துச் செல்ல
நிலைத்த கால்கள் நீரினில் புதைய
கனத்த சுமைகள் கரைந்து போக
மனது மகிழ்ந்து மிதக்கும் பரவசம்

அருவியின் ஓசையும் அழகிய வீழ்ச்சியும்
குருவிகள் இன்பமாய்க் குலவிடும் காட்சியும்
உருகிய உள்ளத்தில் உறைகின்ற வேளையில்
தருகின்ற பரவசம் தன்னிலை மறக்குமே.

ஒளவை.

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading