மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

” மாதரின் மறுபக்கம் “

ரஜனி அன்ரன் (B. A) …” மாதரின் மறுபக்கம் ” 12.03.2026

மாதர்சக்தி மாபெரும்சக்தி
மாட்சிமை மிக்கது மாதர்மாண்பு
அன்பு பொறுமை அடக்கம் நேர்மை
அத்தனையும் மாதர்மாண்பே
மனுக்குலத்திற்கு பலபக்கங்கள்போல்
மாதருக்கும் மறுபக்கமென ஒன்றுஉண்டே !

அன்புகாட்டினால் அவளொரு நூலகம்
அவளை அடக்கிப் பார்த்தால் போர்க்களம்
மென்மையென்பது அவள் குணமல்ல
மேதினி கொடுத்த முகமூடி
சரியென்று தலையாட்டும் மெளனத்தின் பின்னே
முடியாதென்று முழங்கும் எரிமலையும்அவளே !

பூவிலும்மெல்லிய பூவையவள்
பொறிதட்டினால் குமுறிடுவாள் பேரலையாய்
சமூகத்தின் பார்வையில் அவள்மெல்லினம்
சவால்களின் மத்தியில் அவளோவல்லினம்
தியாகத்தில் தனையுருக்கும் மெழுகுவர்த்தியல்ல
இருளைவிரட்ட தன்னையேஎரிக்கும் சக்தியும்அவளே
மொத்தத்தில் மாதர்இதயம் ஒருமறைக்கப்பட்ட காவியமே !

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading