மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-03-2026

தாலாட்டும் கைகளும்
தடைகளை தந்தாலும்
முன்னேற்றும் விழிப்போடு
வரலாற்றை வகுக்கிறாள்.

சமையலறையே கதியற்று
சாதிக்கும் மாதரே
சரித்திரம் படைக்கும்
சாமர்த்தியமும் இவளே.

கடலளவு துயரை
கையினுள் போட்டு
புன்னகையே உலகிற்கு
புலர்பிக்கும் பெண்ணியம்.

பொறுமையின் சிகரமாய்
பூமியை ஆழ்கிறாள்
பூமாதேவியும் பூரிக்கிறாள்
மாதரின் மறுபக்கம் கண்டு .

Jeba Sri
Author: Jeba Sri

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading