கணப்பொழுதில்

கணப்பொழுதில்.. சிவருபன் சர்வேஸ்வரி கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி முடிக்கும் காரியம் தெரியாதவர்...

Continue reading

ஒளவை

மூன்றாவது கண்
*********************
மண்ணில் எங்கும்
மானிட அவலம்
எண்ணிப் பார்த்தால்
எங்கும் வன்மம்
பண்பிலா செயலைப்
பார்த்து நோகக்
கண்கள் இரண்டு
காணாது இறைவா

மனிதர் கூட்டம்
மிருகம் போல
புனிதம் அற்றுப்
பழிகள் தொடருதே
புரியும் போரில்
பகையை வெல்ல
எரிக்கும் கண்ணாய்
ஒன்று வேண்டும்

பொய்மை நோக்கம்
புரிந்ததும் அழித்திட
மெய்யாய் ஒருகண்
முகத்தில் இருந்தால்
ஆயுதம் எதுவும்
அணுவில் வேண்டாம்
பாயும் பார்வையே
பகையை எரிக்கும்

முதலாம் கடவுள்
மூன்று கண்ணை
அதனால் தானே
அமைத்துக் கொண்டார்
இதனைச் சாட்டாய்
எடுத்துக் காட்டி
மிதமாய் ஒன்று
எமக்கும் கேட்போம்.

ஒளவை.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் செல்லாக்காசு புவனத்தில் பலநாட்டின் நாணய மதிப்பு புழங்கிடும் பல்வேறு நாமத்தின் சிறப்பு பலநாட்டின் பணத்தால் பாரிய விரிசல் பதுக்கிய...

    Continue reading