18
Jun
தங்கசாமி தவக்குமார்
ஆரோக்கிய வலுவும்
ஆசனங்களும் '
ஆரோக்கிய வலு நிறைந்த தேகமே...
18
Jun
ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்
ஆரோக்கிய வலுவும்
ஆசனங்களும் ''
ஆரோக்கிய வலு நிறைந்த தேகமே
பொருள் பொதிந்த...
18
Jun
ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்
கவிதை 805
உடலை வளைத்தாலே வலிமை பெறும்
உள்ளமும் வளர்ந்து தெளிவு பெறும்...
ஒளவை
மூன்றாவது கண்
*********************
மண்ணில் எங்கும்
மானிட அவலம்
எண்ணிப் பார்த்தால்
எங்கும் வன்மம்
பண்பிலா செயலைப்
பார்த்து நோகக்
கண்கள் இரண்டு
காணாது இறைவா
மனிதர் கூட்டம்
மிருகம் போல
புனிதம் அற்றுப்
பழிகள் தொடருதே
புரியும் போரில்
பகையை வெல்ல
எரிக்கும் கண்ணாய்
ஒன்று வேண்டும்
பொய்மை நோக்கம்
புரிந்ததும் அழித்திட
மெய்யாய் ஒருகண்
முகத்தில் இருந்தால்
ஆயுதம் எதுவும்
அணுவில் வேண்டாம்
பாயும் பார்வையே
பகையை எரிக்கும்
முதலாம் கடவுள்
மூன்று கண்ணை
அதனால் தானே
அமைத்துக் கொண்டார்
இதனைச் சாட்டாய்
எடுத்துக் காட்டி
மிதமாய் ஒன்று
எமக்கும் கேட்போம்.
ஒளவை.
Author: Nada Mohan
19
Jun
க.குமரன ( வெற்றி )
தினம் நாடும் எண்ணம்
மனம் நாடும்...
19
Jun
“மதிமகன்”
வெற்றி”(359)
எட்டி எட்டிப் பார்க்கும்
எதிரிலும் வந்தும் நிற்கும்
கட்டி அணைக்க போக…
கண்ணாம் பூச்சி காட்டும்!
கிட்டுதென...
19
Jun
சிவரூபன் சர்வேஸ்வரி
செந்தூரப்பூவே
ஃஃஃஃஃஃஃஃஃஃஃ
செந்தூரப்பூவே செங்காந்தள் விழியே வருவாயே//
மந்தாரம் கொட்டும் மாசில்லாத வீணையிலே//
ஒய்யாரமாக ...