பாசத்தின் பகிர்வினிலே

பாசத்தின் பகிர்வினிலே பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே வாசமுல்லை விரிந்தது...

Continue reading

பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

ஒளியிலே தெரிவது

ஜெயம் தங்கராஜா

கவி 749

ஒளியிலே தெரிவது

ஒளியிலே தெரிவது இருளகன்ற பாதை
அந்த பாதையின் மேலே சுறுசுறுப்பாக மனிதர்கள்
ஞாலத்தின் மேலே வெளிச்சத்தின் சாலம்
சூரிய விளக்காலெங்கும் ஒளிமயமான கோலம்

ஒளியில் தெரிவது இயற்கையின் அழகு
எழிலுடன் திகழும் மாட்சிமை உலகு
பயத்தை விட்டகற்றி உற்சாகமடையும் உயிரினம்
பசியை ஆற்ற விளைந்துவிடும் பயிரினம்

ஒளியில் தெரிவது நன்மைகளின் வரவு
ஒளித்துநின்று எட்டிப்பார்க்கும் ஓடிப்போன இரவு
அருளையே அள்ளித்தரும் இறைவனின் தோற்றம்
பெருமைப்படுத்தும் ஒளியாலே பூலோகமே கொண்டாட்டம்

ஜெயம்
14-11-2024

Nada Mohan
Author: Nada Mohan