ஒளியிலே தெரிவது

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-42
14-11-2024

ஒளியிலே தெரிவது…

ஒளியின்றி உலகமையாது
ஓய்வின்றி உடல் இயங்காது
வளமின்றி நிலம் அமையாது
வளியின்றி உயிர் வாழாது

கனவின்றி எம் இனம் பிறக்கவில்லை
கனவு பலிக்க பட்ட பாடு மறக்கவில்லை
உறவுகளை இழந்த கதை யாரறிவார்
ஊன்று கோலும் அற்றநிலை யார் புரிவார்?

வண்ண விளக்கு வீட்டில் எரிந்தாலும்
வரும் திரியின் வேதனை யாரறிவார்
எண்ணமெல்லாம் நிழலாய் தொடருது
என் மகனில் தெரியுது உன் சிரிப்பும் கூட

கண்ட கனவு பலிக்கட்டும் அண்ணனே..
காவியமே காந்தள் மாவீரச் செல்வங்களே
ஒளியிலே தெரிவது தங்கள் முகமே
ஒரு போதும் அணையாமல் ஒளிரனுமே

நம்பிக்கை ஒளியில் நடப்போம்
நாளை நமக்கொரு தேசம் கிடைக்கும்
கனவெல்லாம் நனவாகிப் போகும்
காலம் வெகு தூரமில்லை செல்வங்களே..

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் அறிவாலயம் அனலானதே .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின்...

Continue reading