மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

ஒளியிலே தெரிவது

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-42
14-11-2024

ஒளியிலே தெரிவது…

ஒளியின்றி உலகமையாது
ஓய்வின்றி உடல் இயங்காது
வளமின்றி நிலம் அமையாது
வளியின்றி உயிர் வாழாது

கனவின்றி எம் இனம் பிறக்கவில்லை
கனவு பலிக்க பட்ட பாடு மறக்கவில்லை
உறவுகளை இழந்த கதை யாரறிவார்
ஊன்று கோலும் அற்றநிலை யார் புரிவார்?

வண்ண விளக்கு வீட்டில் எரிந்தாலும்
வரும் திரியின் வேதனை யாரறிவார்
எண்ணமெல்லாம் நிழலாய் தொடருது
என் மகனில் தெரியுது உன் சிரிப்பும் கூட

கண்ட கனவு பலிக்கட்டும் அண்ணனே..
காவியமே காந்தள் மாவீரச் செல்வங்களே
ஒளியிலே தெரிவது தங்கள் முகமே
ஒரு போதும் அணையாமல் ஒளிரனுமே

நம்பிக்கை ஒளியில் நடப்போம்
நாளை நமக்கொரு தேசம் கிடைக்கும்
கனவெல்லாம் நனவாகிப் போகும்
காலம் வெகு தூரமில்லை செல்வங்களே..

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading