ஔவை

பெளர்ணமி இரவில்….
=====================

வெட்ட வெளியிலொரு வட்ட முழுநிலவு
வானமதில் கதைபலதை உரைக்கும் -அது
வாழ்வுதனில் கனவுகளை நிறைக்கும்

கொட்டும் பனியிரவில் பட்டு உடல்நடுங்க
காதலது கண்சிமிட்டி அழைக்கும் – மனம்
காட்சிகளைக் கவியெழுத நினைக்கும்.

சிட்டுக் குயிலிரண்டு தொட்டுக் குலவிடவும்
சோலைமரம் தன்நிலையை மறக்கும் -அதில்
சேதிபல உள்மனதில் இருக்கும்

நட்ட நடுநிசியில் இட்ட கவி வரிகள்
நாளையதில் இனியவைகள் சேர்க்கும் -அது
நானிலத்தில் விடிவுகளை நோக்கும்.

ஒளவை.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் அறிவாலயம் அனலானதே .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின்...

    Continue reading