“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

கஞ்சா போதை……….

இரா.விஜயகௌரி

அஞ்சா நெஞ்சம் கொண்டலையும்
கஞ்சா போதையின் உள் நுழைவில்
விஞ்சிம் உந்தன் மேன்மைகளை
கொஞ்சமும் எண்ணா கஞ்சன் நீ

பஞ்சமும் பசியும் தலை விரிக்க
கொஞ்சும் மழலையும் பரிதவிக்க
கஞ்சா உந்தனின் தேடலிலே -நீ
தஞ்சமாய் தளர்ந்து நிலை குலைந்தாய்

அஞ்சுகம் அவளது அன்புனக்கு
கொஞ்சமும் நினைவில் எழவில்லை -உன்
கஞ்சா போதையின் ஏக்கம் மட்டும்
நிலைதடுமாறி கழிவரக்கம் தொலைத்த மகனாய் நீ

எஞ்சிய நாட்கள் கேள்வியிட
ஏதிலியாய் நீ பரிதவிக்க -தினம்
நாணிடும் பொழுதுகள் புள்ளியிட
கஞ்சா உனது காதலியோ

அழிவினை நீயே எழுதுகிறாய்
ஆக்கத்தின் நொடிகளை குழிபுதைத்தாய்
நாணிடும் செயல்களை உனதாக்கி
ஓடுவதெல்லாம் கஞ்சா போதைதனைத் தேடி

Nada Mohan
Author: Nada Mohan