பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

கடலின் தாகம்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

வங்கக் கடலுக்குத் தாகம்
வானம் தொட ஆசையில்
பொங்கிப் பொங்கி உயர
எழுந்திடும் விழி மோகம்

சோகங்கள் சூழும் மேகம்
தாகங்கள் சூறாவளியில்
மொங்கி மொங்கித்
துள்ளும் மழையில்
நனையும் அலை தியாகம்

ஆங்காங்கே மிதந்து சுழலும்
சுறா மீனோ எப்போ விழும்
வானமென வாய் அகன்றிட
இரவு பகல் போராடித்
தள்ளாடும் கடல் கப்பலின்

சாகஷ விளையாட்டுப் பாராது வானமின்னும்
தொடவில்லையே என
உறங்க மறுத்த விழியில்
கடலின் தாகமோ தாகம்.

Nada Mohan
Author: Nada Mohan