கடலின் தாகம்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

வங்கக் கடலுக்குத் தாகம்
வானம் தொட ஆசையில்
பொங்கிப் பொங்கி உயர
எழுந்திடும் விழி மோகம்

சோகங்கள் சூழும் மேகம்
தாகங்கள் சூறாவளியில்
மொங்கி மொங்கித்
துள்ளும் மழையில்
நனையும் அலை தியாகம்

ஆங்காங்கே மிதந்து சுழலும்
சுறா மீனோ எப்போ விழும்
வானமென வாய் அகன்றிட
இரவு பகல் போராடித்
தள்ளாடும் கடல் கப்பலின்

சாகஷ விளையாட்டுப் பாராது வானமின்னும்
தொடவில்லையே என
உறங்க மறுத்த விழியில்
கடலின் தாகமோ தாகம்.

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading