கடலின் தாகம்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

வங்கக் கடலுக்குத் தாகம்
வானம் தொட ஆசையில்
பொங்கிப் பொங்கி உயர
எழுந்திடும் விழி மோகம்

சோகங்கள் சூழும் மேகம்
தாகங்கள் சூறாவளியில்
மொங்கி மொங்கித்
துள்ளும் மழையில்
நனையும் அலை தியாகம்

ஆங்காங்கே மிதந்து சுழலும்
சுறா மீனோ எப்போ விழும்
வானமென வாய் அகன்றிட
இரவு பகல் போராடித்
தள்ளாடும் கடல் கப்பலின்

சாகஷ விளையாட்டுப் பாராது வானமின்னும்
தொடவில்லையே என
உறங்க மறுத்த விழியில்
கடலின் தாகமோ தாகம்.

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading