பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

கணப்பொழுதில்..

வியாழன் கவிதை நேரத்துக்காக..
சிவதர்சனி இராகவன்
சுவிஷ்..

கணப்பொழுதிலே..

எத்தனை கனவுகள் மனத்திடை
எண்ணங்கள் வான் வழி பறக்க
கட்டுப்படுத்த முடியா ஆசைகள்
கணக்கற்ற ஆவலும் அணைகடக்கும்..

அழகான ஓவியமாய் வாழ்க்கை
வண்ணம் வரையும் நம்பிக்கை
வரைகள் போல உயரும் நட்புகள்
ஆகாயம் முட்டும் கற்பனைகள்..

எப்போ எப்படி எது நிகழும்
புதிர் போடும் காலங்கள் அது
புன்னகை மாறாத முகங்களிலும்
பூத்துக் கிடக்கும் மரண ரேகை..

அழிவின் விழிம்பில் மனித இனம்
இயற்கை பாதி செயற்கை மீதி
போரில் பாதி போக்குவரத்தில் மீதி
கணப்பொழுதில் மாறுது தலை விதி..
சிவதர்சனி இராகவன்
19/6/2025

Nada Mohan
Author: Nada Mohan