இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

கணப்பொழுதில்..

வியாழன் கவிதை நேரத்துக்காக..
சிவதர்சனி இராகவன்
சுவிஷ்..

கணப்பொழுதிலே..

எத்தனை கனவுகள் மனத்திடை
எண்ணங்கள் வான் வழி பறக்க
கட்டுப்படுத்த முடியா ஆசைகள்
கணக்கற்ற ஆவலும் அணைகடக்கும்..

அழகான ஓவியமாய் வாழ்க்கை
வண்ணம் வரையும் நம்பிக்கை
வரைகள் போல உயரும் நட்புகள்
ஆகாயம் முட்டும் கற்பனைகள்..

எப்போ எப்படி எது நிகழும்
புதிர் போடும் காலங்கள் அது
புன்னகை மாறாத முகங்களிலும்
பூத்துக் கிடக்கும் மரண ரேகை..

அழிவின் விழிம்பில் மனித இனம்
இயற்கை பாதி செயற்கை மீதி
போரில் பாதி போக்குவரத்தில் மீதி
கணப்பொழுதில் மாறுது தலை விதி..
சிவதர்சனி இராகவன்
19/6/2025

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading