” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கணப்பொழுதில்..

வியாழன் கவிதை நேரத்துக்காக..
சிவதர்சனி இராகவன்
சுவிஷ்..

கணப்பொழுதிலே..

எத்தனை கனவுகள் மனத்திடை
எண்ணங்கள் வான் வழி பறக்க
கட்டுப்படுத்த முடியா ஆசைகள்
கணக்கற்ற ஆவலும் அணைகடக்கும்..

அழகான ஓவியமாய் வாழ்க்கை
வண்ணம் வரையும் நம்பிக்கை
வரைகள் போல உயரும் நட்புகள்
ஆகாயம் முட்டும் கற்பனைகள்..

எப்போ எப்படி எது நிகழும்
புதிர் போடும் காலங்கள் அது
புன்னகை மாறாத முகங்களிலும்
பூத்துக் கிடக்கும் மரண ரேகை..

அழிவின் விழிம்பில் மனித இனம்
இயற்கை பாதி செயற்கை மீதி
போரில் பாதி போக்குவரத்தில் மீதி
கணப்பொழுதில் மாறுது தலை விதி..
சிவதர்சனி இராகவன்
19/6/2025

Nada Mohan
Author: Nada Mohan