கமலா ஜெயபாலன்

இலக்கு
இலக்கு இல்லா வாழ்வு
கடிவாளம் இல்லாக் குதிரை போல/
தான் போனபோக்கில்
தலைதெறித்து ஓடும்/
எண்ணியது எண்ணமாய்
இருத்தி மனதில்/
கண்ணியமாக்க் காரியம்
கச்சிதமாய் நகர்த்த/
நோக்கம் நிறைவடையும்
நொந்தமனம் சாந்தமகும்/

பள்ளிப் படிப்பதனில்
பாதை மாறாமல்/
கள்ளத் தனமின்றி
கற்றிட்டால் கல்விதனை/
எல்லை நாம்கண்டு
எட்டிடலாம் இலக்கை/
கருவில் சுமந்து
கற்பனையில் மிதந்து/
தருவாய் கிளைகள்
பரம்பி வாழ்வில்/
சாதனைகள் புரிய
நாம் பெற்றவர்கள்/
ஆல்போல தளைத்து
அறுகுபோல வேறூன்றி/
வாழ்வில் சிறந்து
பதினாறு செல்வங்களும்/
பெற்று நீடூழிவாழ
வேண்டும் என்பதே/
எம் இலக்கு
இதுவே நோக்கு:/

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading