சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

கமலா ஜெயபாலன்

இலக்கு
இலக்கு இல்லா வாழ்வு
கடிவாளம் இல்லாக் குதிரை போல/
தான் போனபோக்கில்
தலைதெறித்து ஓடும்/
எண்ணியது எண்ணமாய்
இருத்தி மனதில்/
கண்ணியமாக்க் காரியம்
கச்சிதமாய் நகர்த்த/
நோக்கம் நிறைவடையும்
நொந்தமனம் சாந்தமகும்/

பள்ளிப் படிப்பதனில்
பாதை மாறாமல்/
கள்ளத் தனமின்றி
கற்றிட்டால் கல்விதனை/
எல்லை நாம்கண்டு
எட்டிடலாம் இலக்கை/
கருவில் சுமந்து
கற்பனையில் மிதந்து/
தருவாய் கிளைகள்
பரம்பி வாழ்வில்/
சாதனைகள் புரிய
நாம் பெற்றவர்கள்/
ஆல்போல தளைத்து
அறுகுபோல வேறூன்றி/
வாழ்வில் சிறந்து
பதினாறு செல்வங்களும்/
பெற்று நீடூழிவாழ
வேண்டும் என்பதே/
எம் இலக்கு
இதுவே நோக்கு:/

Nada Mohan
Author: Nada Mohan