“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

கமலா ஜெயபாலன்

தீயில் எரியும் நம் தீவு
எரியுது எரியுது ஏற்றிய பாவம்
புரியுது புரியுது போற்றிய தெய்வம்
எங்கள் கண்ணீர் இட்ட சாபம்
பொங்கும் தீயாய் பரவுது தீவில்
கண்கள் இருந்தும் குருடாய் அலைந்தோம்
கண்ணீர் விட்டோம் கதறிதுடித்தோம்
எண்ணரும் உயிர்கள் இழந்த சோகம்
மனதால் மறையுமா மறக்கவும் முடியுமா
எழில் மிகு எங்கள் இலங்கைத் தீவு
அழிந்து போகுது அன்னியர் வரவால்
அண்ணன் தம்பி ஆட்சி யாலே
விண்,மண்,கடலும் விற்பனை ஆச்சு
எரித்தல் என்பது எமக்குப் புதிதா
எத்தனை முறைகள் இனவெறி தீயில்
எரிந்தன மனைகள் எம்இன உயிர்கள்
ரத்த வெள்ளம் முள்ளி வாய்க்காலில்
செத்தவர் லட்சம் சித்திர வதையில்
மொத்தமாய் சரன் புக முதுகின் பின்பறம்
சுட்டனர் வெறியர் சுதந்திரம் கோர. கட்டிய கண்ணும்அம்மண கோலமும்
கற்பினை சூறை யாடிய கொடுமையும்
எப்படி மறப்போம் இது வெறும் பொறியே
எரியும் தமிழர் எண்ண இக் கொடுமைகள்
எரியும் இலங்கை என்றோ ஒர்நாள்
தீர்ப்பை ,தீர்வை தீயே தரும் பார்
தீவே தமிழர் தீவாய் வரும் பார்

Nada Mohan
Author: Nada Mohan