கமலா ஜெயபாலன்

விழிபேசும் மொழிகள்
கண்ணோடு கண்பேச கார்முகிலும் தானோடி
விண்ணதிரக் கொட்டியுமே வேகமாயும்-மண்ணினிலே
பெண்ணவளும் மெய்சிலிர்க்க பேசுகிறாள் விழிகளினால்
பண்ணிசையும் பாய்ந்தோட பாவையவள்-கண்பாடும்
காதலினால் கண்பேசும் காரிகையாள் தானசைய
பாதவிரல் கோலமிட பேதையவள்-மோதலினால்
என்மனமும் பேதலிக் ஏங்குகிறேன் உன்நினைவால்
முன்னின்று கன்னியவள் மூச்செறிந்து-அன்பினாலே
இன்பயூற்றில் ஏங்குகிறாள் ஏற்றமுடன் கண்களினால்
சொன்னபதல் சொர்க்கமடி சுந்தரியே-என்னவளே
வேல்விழியால் வேகமுடன் வந்தபதில் சொர்க்கமடி
பால்வடியும் உன்வதனம் பார்வையால் -கால்பார்க்க
பொங்கிவரும் நீரூற்றாய் போனேனடி பெண்ணரசி
அங்கதனில் கண்விழித்தேன் அஞ்சுகமே-நெஞ்சமதில்
காதலினால் வாழ்வினிலே களித்திடலாம் என்னாளும்
மோதலிலும் காதல்வரும் முனைப்பு

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading