கமலா ஜெயபாலன்

மாவீரரே
தாய் மண்காக்க தியாகம் செய்த
பாய்யும் இன்றி பட்டிணி கிடந்து
காயந்த உணவும் கண்ணுக்கு எட்டாமல்
மாய்ந்த எங்கள் மாவீர்ரே எழுவீர்/

தாய் மனமும் தடுமாற தயாரானீர்
நோய் கண்ட நேரமும் நெருப்பானீர்
சேய்யைத் தேடிச் சித்தம் கலங்கி
ஓய்ந்த தாய்க்காய் எழுவீர் மாவிர்ரே/

எத்னை எங்கள் இனத்தவரை இழந்தோம்
அத்தனையும் அமிர்தம் அன்றோ எமக்கு
முத்தான எம்மினம் முடங்கியது ஏனோ
சத்தாக மீண்டும் சாதனை படைப்போம்/

அவலம் காக்க அரும்புங்கள் துளிராய்
தவமாய் கிடைத்த தங்கங்கள் நீங்கள்
அங்கம் இழந்து அல்லல் படுகின்ற
சொந்தங்கள் காக்க சத்தமின்றி வாரும்/

உறவுகள் பிரிந்தே உவாதைப் படுகின்ற
மறவரைக் காக்க மாவீரரே எழுக
எம்மினம் காக்க இழந்தோம் இன்னுயிகள்
எம்மவர் யாவர்க்கும் ஏற்றுவோம் தீபம்

சந்தம் சிந்தும் சந்திப்புக்காக
கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

    Continue reading