கமலா ஜெயபாலன்

குருதிப்பனல்
தெளிந்தோடும் நீரே தீமையில்லா ஆறு
தண்ணீரில் உப்பில்லை தங்க நீரது
ஒளியிழந்து உதிரமோடி ஓய்ந்தது ஓரினம்
உண்மை மறைக்கப் பட்ட வரலாற்றில்
வெளிச்சம் இல்லை வீடுகள் குப்பிவிளக்கில்
வேதனையை யாரறவர் வேட்டுவர் அறிவரோ
களித்தாடும் எம்மண்ணில் காடயர் கூட்டம்
கண்ணீராய் ஓடும் எம்மினத்தின் இரத்தம்.

அன்று நடந்தது இன்றும் கனக்குது
அவலம் அனைத்தும் அனலாய்க் கொதிக்குது
கொன்று குவித்தனர் குருதி குடித்னர்
கண்முன் மாந்தர் கலங்கி அழுதனர்
நின்று அறுத்தான் கடவுள் இன்று
நிலையில்லா வாழ்வில் நிகழ்ந்தது என்ன

முள்ளி வாய்க்கால் முன்றத்தில் நடந்தது
முற்றிலும் கொடுமை முறைக் கேடு
பள்ளிப் பிள்ளையும் பச்சிளம் குழந்தையும்
பருவம் பாராது பட்டழிந்தது பதைக்குதே
அள்ளி எடுத்தான் ஆருயிர் அனைத்தையும்
அத்தனையும் குருதிப் புனலாய் பாய்நத்து
கொள்ளி வைக்காமல் குழியில் போனதை
கொட்டி அழுதாலும் குறையாது கோபம்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading