புனித ரமலானே

புனித ரமலானே வஜிதா முஹம்மட் மறையை வழங்கிய மாதம்நீ மனிதம் சிறக்கும் ஈகையின் மாதம்நீ அ௫ளைப் பொழியும் மாதம்நீ அகிலமாழும் இறை...

Continue reading

கலாதேவி பத்மநாதன்

சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு
மழை நீர்

அமிர்த மழையே அனைத்தும் நீயே இமிழ்தினும் இல்லையேல் இவ்வுலகம் இல்லையே

உணவை உன்னருளால் உருவாக்கிக் கொடுத்தாயே உண்ணும் உணவாக உன்னையே தந்தாயே

மழை நீர் மண்ணில் மலராது போய்விடின் உழைப்பின்றி உலகம் உணவுபஞ்சம் காணுமே

செல்வத்துள் செல்வம் செழித்திடும் மழையே வல்லது வான்துளி வாழ்ந்திட வைக்குமே

மண்ணின் பசும்புல் மழைத்துளி வரமே எண்ணிய வாழ்விற்கு ஏற்றம் தந்திடுமே

கடல் வளத்தை
காக்கும் கருமேக கூட்டமே
உடல் பொருள்
ஆவிஎல்லாம் உன்னாலே இயக்கமே

காலம் தவறினும்
காணமழை இல்லையேல்
ஆலய பூசையும்
ஆன்மீக வழிபாடுமே

மழைநீர் இல்லையேல் மண்ணில் உயிரில்லை
உழைக்கவும்
வழியின்றி
ஒழுக்க வாழ்வில்லையே

நன்றி வணக்கம்

சந்தம் சிந்தும் சந்திப்பிற்காக கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா

சகோதரர் பாவை அண்ணா அவர்களின் அறிய பணிக்கான மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

Nada Mohan
Author: Nada Mohan