கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

கலாதேவி பத்மநாதன்

சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு
மழை நீர்

அமிர்த மழையே அனைத்தும் நீயே இமிழ்தினும் இல்லையேல் இவ்வுலகம் இல்லையே

உணவை உன்னருளால் உருவாக்கிக் கொடுத்தாயே உண்ணும் உணவாக உன்னையே தந்தாயே

மழை நீர் மண்ணில் மலராது போய்விடின் உழைப்பின்றி உலகம் உணவுபஞ்சம் காணுமே

செல்வத்துள் செல்வம் செழித்திடும் மழையே வல்லது வான்துளி வாழ்ந்திட வைக்குமே

மண்ணின் பசும்புல் மழைத்துளி வரமே எண்ணிய வாழ்விற்கு ஏற்றம் தந்திடுமே

கடல் வளத்தை
காக்கும் கருமேக கூட்டமே
உடல் பொருள்
ஆவிஎல்லாம் உன்னாலே இயக்கமே

காலம் தவறினும்
காணமழை இல்லையேல்
ஆலய பூசையும்
ஆன்மீக வழிபாடுமே

மழைநீர் இல்லையேல் மண்ணில் உயிரில்லை
உழைக்கவும்
வழியின்றி
ஒழுக்க வாழ்வில்லையே

நன்றி வணக்கம்

சந்தம் சிந்தும் சந்திப்பிற்காக கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா

சகோதரர் பாவை அண்ணா அவர்களின் அறிய பணிக்கான மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading