கவிதை நேரம்-27.03.2024 கவி இலக்கம்-1847 வலியதோ முதுமை —————— மனித

கவிதை நேரம்-27.03.2024
கவி இலக்கம்-1847
வலியதோ முதுமை
——————
மனித வாழ்வில் மீண்டும் வராது இளமை
வந்து போவது வாழ்வில் என்றும் முதுமை
வாலிபம் கடந்து விட்டதென வருந்தக் கூடாது
வலிமை கொண்டு வாழ்வதே முதுமையின் அழகு
வயோதிபம் வாழ்க்கையில் ஒரு வரம்
காலத்தின் தரும் பெரும் தவம்
வயோதிப வாழ்வில் ஆற்றாமையால் ஒரு ஆளுமை
பேச்சிலும் சொல்லிலும் பெருமை
பெயரளவில் அனுபவசாலிகள் ஒரு திறமை
வாழ்வில் முதுமை பட்ட மரமல்ல
பட்டறிவு கொண்ட பொக்கிசம்
கேட்டாலும் கிடைக்காத பெரும் வரம்
பலருக்கு கிடைக்காத அரிய பதவி
தினம் பாசத்திற்காக அழும் குழந்தை
யார் உதவுவார் என ஏங்கி துடிக்கும் முதுமை
நரை என்பது தலைக்கு பொன் முடி
சுருக்கம் வருவது தளர்ச்சியின் வெளிப்பாடு
நாளை நமக்கும் வரும் முதுமை
வலியதோ முதுமை காலம் வெல்லும்

Nada Mohan
Author: Nada Mohan

சந்த கவி இலக்கம்_215 சிவாஜினி சிறிதரன் "நல்லுறவு" பொறுமை சகிப்பு தன்மை இரண்டும் தெய்வீக குணங்கள் இதற்கு எஞ்சிய நற்குணம் ஏது...

Continue reading

ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

Continue reading

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading