தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

கீதா பரமனந்தம்

விலகிச் செல்லும் கோடை!

உலவுது இருளின் சாடை
உதயம் காணுது வாடை
விலகிச் செல்லும் கோடை
விதைத்து நிற்குது மஞ்சளாடை !

புவியின் சுழற்சிப் பாதை
புனைந்து தந்த கீதை
நழுவும் இளமைக் கோலம்
நயக்கும் புதுமைத் தூலம்!

கதிரின் அணைப்பு விலகி
கனத்த கூதல் சூடும்
உதிரும் பசுமை கண்டே
உறவும் எட்டிப் போகும்!

பிறையில் வளரும் நிலவாய்
பிணைக்கும் நம்பிக்கை சூடி
அணைக்கும் தளிர்கள் நாளை
அதுவரை காப்பேன் தனிமை

27-10 -2021

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading