“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

கீத்தா பரமானந்தன்

அதிகாலை அழகு!

மூடிய பனியும்
முகைவெடித்த மொட்டும்
கூடிப் பறக்கும்
கொஞ்சும் புறாக்களும்
முகிலைக் கிழித்து
முகங்காட்டும் கதிரும்
அகமெல்லாம் ஆனந்தக்
கூத்தாய் விடியல்!

பஞ்சுப் பொதிகளாய்
பள்ளிக் குழந்தைகள்
அஞ்சலற்று விரையும்
இளையோர் கூட்டம்
நெஞ்சுரம் கொண்ட
மூத்தவர் முகங்கள்
பல்வண்ணக் கதம்பமாய்
பனிவிலக்கும் காலை!

நத்தையின் ஊர்வும்
நழுவிக் கரைய
சொத்தையாய்ச் சிரிக்கும்
செவந்தி மலர்கள்
கத்தையாய்த் தோட்டத்தில்
இரைதேடும் சிட்டுக்கள்
தத்தியே விலகுது
இருளின் திரையும்!

கீத்தா பரமானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan