புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

கீத்தா பரமானந்தன்

தலைப்பு!
மனத்தின் கருத்தை
கோர்த்து நின்றே
மகிடஞ்சூட்டும் ஆரம்!
மறுகி நின்றே
மணிக் கணக்காய்
மலைக்கவைக்கும் பாரம்!
கவிதை புனைய
நம்மையும் பாடாய்
அலைக்கும் சிலநேரம்!

தொடுத்த படையல்
தோரணம் ஆக
கருவாகும் சாரம்!
பார்த்த கணத்தில்
படரவும் சொல்லும்
பக்கம் பாராது
ஓடவைக்கும் தூரம்!

கையில் மையில்
காட்சிகள் மாற்றும்!
பொய்யைப் புரட்டிப்
புழுதியாய்த் தூற்றும்!
தையல் தாவணி
மெருகைக் கூட்டும்!
தலைப்பைக் காட்டி
மதியை ஏய்க்கும்!

தாயும் அன்பாய்த்
தலையைத் துவட்டித்
தாங்கியே நிற்கும்
சேலைத் தலைப்பு!
காலை மாலை
செய்திகளாகிக் கவரும் வளைப்பு!
உலகே இன்று
மயங்கிக் கிடப்பதும்
வலைப்பூ!

கீத்தா பரமானந்தன்
18-09-23

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading