11
Jun
எழுத்தாளர் கரம் தொட்டு
உருவாகும் ஓர் ஆக்கம்
ஆண்டுகள் பல கடந்தும் தீரவில்லை ஊக்கம்
சிந்தனையை...
11
Jun
குருவி
இல 88
= குருவி
காலை விடியலில் கீச்சிடும் குருவி
சின்ன...
11
Jun
வாழ்த்து பகிர்வு
தங்கசாமி தவக்குமார்
அகரம் தொட்ட காற்றலை
தொடர்கிறது இருபத்தொன்பது...
கீத்தா பரமானந்தன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
முகமூடி !
விரட்டும் விதியின் விரைவு ஓட்டம்
விடாது தொடரும் பம்பர ஆட்டம்
கைக்குள் அடக்காக் கணக்கற்ற தேவை
கண்டபடி விரியும் எண்ணற்ற ஆசை
உவப்புத். தேடி உண்மைகள் புதைத்து
உருவம் மாற்றி உள்ளமும் ஆற்றி
உறுத்தும் வாழ்வின் உணர்வுகள் மரத்து
உலவும் மனிதர் உலகில் கோடி
உடையும் நடையும் களையும் இழந்து
உருக்குலைந்து உருட்டிடும் ஆயுள்
உலகுக்கு மறைக்க உதவிடும் தருணம்
முகமூடி என்னும் முகக்கட்டுக் கவசம்
பலவேடம் இட்டு பல்லிளித்து நின்று
பாசாங்கு பசப்பில் சுயந்தனை களைந்து
பரிமாணங் கொண்ட கனவானாய் மின்ன
பலநேரம் துணையாகும் முகமூடி வேஷம்
முகமூடி களைந்து முழுதாய் ஓர்நாள்
உளமார வாழ மனதார ஏக்கம்
உணர்வுகள் மரத்து ஜடமாகு முன்னே
முகமூடி இல்லா ஓர் நாள் வருமா ?
கீத்தா பரமானந்தன்
17-02-25
Author: Nada Mohan
12
Jun
சிவாஜினி சிறிதரன் சந்த சிந்தும்
கவிதை இல
236
"சுமை"
தியாகங்களும் எதிர்பாப்புக்களும் கொண்ட குடும்ப சுமை!
தந்தைக்கு குடும்ப...
09
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
09-06-2026
மாற்றம் கொண்ட மனிதனே சிறப்பு
தேற்றம் பெறுமே திவ்ய நிலைக்கு
சீற்றம் கலைந்து...
08
Jun
செல்வி நித்தியானந்தன் மாற்றம்
மாற்றம் கண்டிட
பலரது இணைப்பு
மாறுமோ வேண்டிட
சிலரது பிணைப்பு
காட்டிடும் ஆர்வமும்
கவிதையின் முனைப்பு
கண்ணியம் காட்டியே
காவிடும்...