கீத்தா பரமானந்தம்

மொழி!
முந்தியே வந்த
மூத்தவள் ஆயேஜ்
சிந்தையின் உணர்வினைச்
சிந்துகின்ற வழியே!
சொந்தமாய் ஏற்றிட்ட
சொத்தாம் முகவரியே
வந்தனை செய்தே
வணங்குகிறேன் ந்த்ஹமே!

சங்கம் வளர்த்த
சரித்திரம் ஆகிச்
சங்கரனையும் பொருதி
சாற்றினாய் மேன்மை
எங்கணும் நிறைந்தே
ஈரடிக் குறளாய்
பங்கம் அற்ற
பவித்திரம் சொன்னாய்!

முத்தாக இயக்கும்
முத்தமிழ் மன்றே
வித்தக மொழியே
வீறுடை தமிழே!
தக்கவள் என்றே
தாங்கிய செம்மொழி
இத்தரை எங்கும்
இசைக்குதே மேன்மை!

சொல்லிடச் சுவைக்கும்
சுந்தரம் நீயே
வல்லமை தந்தே
வாழ்வெலாம் காப்பாய்!

கீத்தா பரமானந்தன்
27-02-2023

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading