மாற்றத்தின் ஒளியாய்..

வியாழன் கவி -2273 மாற்றத்தின் ஒளியாய்.. ஆண்டு ஒன்றின் அழகிய மலர்வில் அத்தனை உளங்களில் மாற்றத்தின் ஒளியாய் இருளெனும் துயரது இனி இல்லை...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்..

வசந்தா ஜெகதீசன் ஊற்றெடுக்கும் அறிவிற்குள் உலகே வசமாகும் நாற்றெடுத்துப் பொங்கலிட்டு நன்றி சொல்தல் முறையாகும் வேற்றகத்தே வாழ்ந்திடினும்...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்

செல்வி நித்தியானந்தன் மாற்றத்தின் ஒளியாய் மாற்றத்தின் வரவாய் மாட்சிமை நிறைவாய் மங்காத ஒளியாய் மனதும் குளிர்வாய் தைமகளின் நகர்வாய் திருநாளும்விரைவாய் ஆதவன் கொடையாய் அகமும் ஆனந்தமாய் பொங்கல்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

மறுபடி சந்திப்போம்
———-
அடர்ந்த காட்டுக்குள்
அழகிய ஒரு பூமரம்
அழகாகப் பூத்திருந்தது
வேட்டைக்காக வந்த இளவல்
பூமரத்தை கண்டு வியந்து
பாட்டுப் பாடி மரத்தை அழகு பார்த்தான்
வேட்டையில் நாட்டமின்றி
வியந்தவன் ஏங்கிநின்றான்
அந்த அழகான பூமரம்
ஆட்கொண்டது அவன் மனதை
அன்று இரவு முழுக்க
பூமரத்தடியில் தங்கினான்
பூமரத்துடன் பேசினான்
முன்னைய ஜென்மத் தொடர்போ
முற்றிலும் மயங்கி விட்டான்
அதிகாலை அவனையும்
உறக்கம் கவ்விக் கொண்டது
ஆதவன் வருகையில்
அருண்டவன் கண்விழித்தான்
அண்ணார்ந்து பார்க்கையில்
ஆகாயம் தான் தெரிந்தது
அழகிய பூமரம் அங்கில்லை
அவனுக்கோ ஆச்சரியம்
பூமரம் எங்கே எனத் தேடியது
அப்போது ஒரு அசரீரி கேட்டது
வேங்கையே நான் உன் முன்னாள் காதலி
நானே பூமரமாகி நின்றேன்
என்நுழலில் நீ உறங்குவதைக் கண்டு
உவகை அடைந்தேன்
இது எனக்கு போதுமென விடைபெற்றேன்
மறுபடியும் சந்திப்போம்
எனக் கூறியது

Nada Mohan
Author: Nada Mohan