புத்தாண்டே வா -56
இன்னமும் மாறவில்லை
கெங்கா ஸ்ரான்லி
மறுபடி சந்திப்போம்
———-
அடர்ந்த காட்டுக்குள்
அழகிய ஒரு பூமரம்
அழகாகப் பூத்திருந்தது
வேட்டைக்காக வந்த இளவல்
பூமரத்தை கண்டு வியந்து
பாட்டுப் பாடி மரத்தை அழகு பார்த்தான்
வேட்டையில் நாட்டமின்றி
வியந்தவன் ஏங்கிநின்றான்
அந்த அழகான பூமரம்
ஆட்கொண்டது அவன் மனதை
அன்று இரவு முழுக்க
பூமரத்தடியில் தங்கினான்
பூமரத்துடன் பேசினான்
முன்னைய ஜென்மத் தொடர்போ
முற்றிலும் மயங்கி விட்டான்
அதிகாலை அவனையும்
உறக்கம் கவ்விக் கொண்டது
ஆதவன் வருகையில்
அருண்டவன் கண்விழித்தான்
அண்ணார்ந்து பார்க்கையில்
ஆகாயம் தான் தெரிந்தது
அழகிய பூமரம் அங்கில்லை
அவனுக்கோ ஆச்சரியம்
பூமரம் எங்கே எனத் தேடியது
அப்போது ஒரு அசரீரி கேட்டது
வேங்கையே நான் உன் முன்னாள் காதலி
நானே பூமரமாகி நின்றேன்
என்நுழலில் நீ உறங்குவதைக் கண்டு
உவகை அடைந்தேன்
இது எனக்கு போதுமென விடைபெற்றேன்
மறுபடியும் சந்திப்போம்
எனக் கூறியது
