கவிதையே தெரியுமா

கவிதையே தெரியுமா காதலின்பம் கவிதையே கனியும் காலமே உனதாக்கி காசினியில் மலர்ந்தாயே கற்பகமே அற்புதமே கலையாத பொக்கிசமே நிற்பதம்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

பாமுகப் பூக்களின் பரிமாணம் சந்தம் சிந்தும் கவிதையில் பிரமாதம்

மரத்திலிருந்து விழுந்த
மலர்கள் மாலையானது
பாமுகத்திலிருந்து விழுந்த பூக்கள்
பாமாலையாகியது.

பாமுகப் பூக்கள் பலவர்ண
பாக்கள் பன்முக கவிஞர் சமர்ப்பணம்.
சங்கமித்த சோலைப் பூக்கள்
நவரசம் நிரம்பிய நர்த்தனம் புரியும்
நவரசப்பூக்கள்.

மனஉணர்வுகளின் வெளிப்பாடு
மனதில் தோன்றும் துளிர்ப்போடு
கிழமையில் ஒருநாள் சந்தம்சிந்த
வழமையாய் கவிஞர் பாவும் எழுத
இணைந்து இருபது பேர்
எழிலாய் பாமுகத்தில்
பாவை தொகுப்பில்
பதிவாய் வந்ததே.

பாமுகப் பூக்கள் நூலாய் வர
உழைத்த நல்லுள்ளங்களுக்கு
உளம் மிகு வாழ்த்துகள்.
கரிசன மூட்டி களம் தந்த
அதிபர் நடாமோகன் தம்பதிக்கும்
வாழ்த்துகள்.
தொகுப்பாளர் பாவை அண்ணா
தம்பதிக்கும் வாழ்த்துகள்
அனைவருக்கும் பாராட்டுகளும்
வாழ்த்துகளும்

நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan