நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

சொர்க்கம்

காத்திருக்கும் இளம்பிஞ்சு
கவலையான முகத்துடன்,
அன்னை கொண்டு
வரும் கஞ்சி
அணைத்துவிடும்
பசிக்கொடுமை தனை.
அரவனைத்த அன்புமுகம்
அன்னையின் திருக்கரங்கள்
அழுக்குச் சட்டை
அம்மணக் கோலம்
அத்தனையும் பெற்றவருக்கு
அருவருப் பில்லா நாற்றம்.
பாசத்திற்குள் பதுக்கி
வைத்த சோகம்
பஞ்சனையில் கிடைக்காத
பரமலோக வேதம்.
மிஞ்சி மிஞ்சி போனால்
மீளும் அந்த சொர்க்கம்
அன்னையில் சேலையில்
ஆடிடும் ஏணை சுகம்
யாருக்கு கிடைக்கும்
இதைவிட ஏது
சொர்க்க லோகம் !

கெங்கா ஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan