“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

உருமாறும் புதிய கோலங்கள்

கடவுள்தான் உருமாறுவார்
கேள்விப்பட்டதுண்டு.
கட்சிகள் உருமாறுவது உண்டு.
கடமைகளும் உருமாறுவதுண்டு.

இங்கு மனிதரும் இப்போ
உருமாறுகின்றார்கள்.
மனிதம் மனிதநேயம் என்றளவில்
உருமாறும் தன்மையில் மாற்றம்.
மக்களுக்கிடையே புரிந்துணர்வு,கொள்கையில்
உருமாறுகிறது.
கொரோனாவால் உருமாறியதும்
குடங்கி வாழ்வதும்
அடக்கி வைத்தவர்.
அடங்கி வாழ்வதும்
உருமாறும் புதிய கோலங்கள்.

மக்கள் மக்களாக இல்லை
மன அழுத்தம், தனிமை
விரக்தி உறுமாற வைத்தது.
எண்ணங்கள் ,சிந்தனைகள்
உருமாறும் புதிய கோலங்கள்.
கோலங்கள் உருமாறட்டும்
காலங்கள் பதில் சொல்லட்டும்.
கடந்து போகும் இவையும்
உருமாறும் புதிய கோலங்கள்
வாழ்வில் இனிமை பிறக்க
உதவட்டும்.

கெங்கா ஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan