சித்திரா பருவம் 760 30.04.2026

செல்வி நித்தியானந்தன் சித்திரா பருவம் அன்னையருக்கு வருடம் ஒருமுறை அழகாய் வந்திடும் விரதமாகும் ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி அகமே நிறைந்து...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

நிகழும் துன்பம்

பெண்கள் தினம் கொண்டாடும்வேளை
பெண்கள் நிலமை பேரின்னலாகியது.
கண்ணீரும் கம்பலையுமாக
கைக்குழந்தையுடன் காட்சி.

மனம் நெகிழும் செயல்
மனிதம் கொலை செய்யபடுகிறது.
மனிதர் பார்த்து இருக்கும்வேளை
மக்கள் குலையாகப் பலி.

புலம் பெயர்ந்த மக்கள்
அயல் நாட்டிடம் தஞ்சம்.
பலம் போருத்திய நாடு
புகலிடம் தருவதில் ஈடு.

காலம் கடந்து போகும்
கோலம் மாறும் நேரம்.
பாலம் போடும் நிலைமை
நிகழும் துன்பம் விலகுமா.

கெங்கா ஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading