“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

நிகழும் துன்பம்

பெண்கள் தினம் கொண்டாடும்வேளை
பெண்கள் நிலமை பேரின்னலாகியது.
கண்ணீரும் கம்பலையுமாக
கைக்குழந்தையுடன் காட்சி.

மனம் நெகிழும் செயல்
மனிதம் கொலை செய்யபடுகிறது.
மனிதர் பார்த்து இருக்கும்வேளை
மக்கள் குலையாகப் பலி.

புலம் பெயர்ந்த மக்கள்
அயல் நாட்டிடம் தஞ்சம்.
பலம் போருத்திய நாடு
புகலிடம் தருவதில் ஈடு.

காலம் கடந்து போகும்
கோலம் மாறும் நேரம்.
பாலம் போடும் நிலைமை
நிகழும் துன்பம் விலகுமா.

கெங்கா ஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan