மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

புழுகு வெடி (392) 30.04.2026

ராணி சம்பந்தர் ஜேர்மனி
புழுகு வெடி

சேற்றிலே மலர்ந்தாலும்
செந்தாமரை அழகானது
காற்றிலே உலர்ந்தாலும்
ரோசாப்பூ வாசமுள்ளது

கூற்று எனும் பேச்சிலே
புலரும் பூக்கள் மட்டும்
வாய் நாறப் பொய்யும்
பிரட்டும் கூசாது உளற

வாய் பிதற்றும் பொய்யில்
உண்மை எதுவென்று
சொல்பவர்க்குத் தெரிந்தும்
பேய் மனம் ஏதேதோ
ஆதாயம் தேடுகிறது

கேட்பவர் காதில் பூச் சுற்றிப்
பழகிப் போனது அதுவோ
காலம் கடந்து கோலம்
கரைந்திடப் புழுகு வெடி
சுக்கல் சுக்கலாகிடுமே .

ராணி சம்பந்தர் ஜேர்மனி