கெங்கா ஸ்ரான்லி

பழமை

பழமை தந்த பசுமை நினைவு
புதுமையில் ஒன்றும் பெரிதல்லவே
பழமை பழமை என்று வெறுப்போர்க்கு
பழமையின் சுவை புரிவதில்லையே.

பழைய சோறு கஞ்சி குடிப்பது
பதப் படுத்தும் உடலையென ஆய்வு.
ஆய்வுகள் தேடும் பழமைதானே
அறிவியலில் மிஞ்சி நிற்கிறதே.

எம்முன்னோரது பழமை கண்ட அறிவியல்
இப்புதியவரை ஆளுமைப் படுத்துகிறதே.
எண்ணிப்பார்த்தால் ஆச்சரியம் ஆனால் உண்மை.
இப் பூமிப் பந்தில் உதித்திடும் உண்மை.

பழமை என எதையும் ஒதுக்காமல்
மதித்துப் போற்றல் பொக்கிஷமாகும்.
பழமை தான் என்றும் புதுமையாகும்
இளமையும் ஒரு நாள் பழசாகும்.

கெங்கா ஸ்டான்லி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading