கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

விடியல்

முந்தையர் வாழ்வில் முயற்சி அதிகம்
எந்தையும் தாயும் எடுத்துரைத் தனரே
சிந்தை கலங்காது சூரிய விடியலில்
முந்தி யடித்து மகிழ்வுடன் காலை

விடிவெள்ளி கண்டு விழிப்பார் விடியலில்
நொடிப்பொழு துந்தான் நேரம் கடத்தாது
விடியலைக் கண்டதும் விறுவிறுப்பு விசையாக
விவசாயம் செய்வார் வயிற்றுப் பசிபோக்க

என்னகுறை கண்டோம் எடுத்துரைத்த செயல்களிலே
இன்பமும் பெருகிய இழைப்பற்ற வாழ்வு
குன்றிலிட்ட தீபமாய் குடும்பத்தில் இருக்க
ஒன்றாய்க் கூடியே ஒற்றுமையாய் வாழ்ந்தனரே…

கோசலா ஞானம்.

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் _ 217 "உறைபனி" பூம்பனி பூத்திருக்கு பாத்திருக்க மலருது பார்வைக்கு அழகு பாலரின் மனதுக்கு மகிழ்வு! காடுகள்...

    Continue reading