தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

முள்ளிவாய்க்கால்

பண்பட்ட நிலத்துப் பயிர்கள் புண்பட்டுக் கருகி
விண்முட்ட அதிரும் செல்லில் கண்மூடிச் சரிந்ததை
எண்ணிடக் கண்களில் இரத்தக் கண்ணீர் சொரிகிறதே!
மண்கண்ட வேதனைகளை மரணித்தாலும் மறக்கத் தகுமோ?

குஞ்சுகளின் பிஞ்சுகளின் குருதிகளும் ஆறாய் ஓடியதே
நெஞ்சு பிளக்கச் செய்கிறதே
வஞ்சகம் இல்லாப் பிஞ்சுக் குழந்தை
அரசியல் பேசியதா? அன்றி ஆயுதம் ஏந்தியதா?

மண்ணில் விளைந்த முத்துக்களின் மரணோலமும்
முள்ளிவாய்க்கால் மண்ணில் மடிந்த மாந்தரை
எண்ணித் துடியாய் துடிக்குது மனமே!
கண்ணீர் ஆறாய்ப் பெருக கதறி நின்றோமன்று….

கோசலா ஞானம்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading