புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

கோசல்யா சொர்ணலிங்கம்–

கோசல்யா வியாழன் கவி 3ம் பாகம் 463/
“மாற்றத்தி்ன் திறவுகோல்”
சாவிகள் எல்லாமே சாவுடன் எம்மோடு
பாவிகள் நாமே தான் பூட்டுக்களோடு..
மேவி ஆட்டுகின்ற ஆளுமை ஒடுக்கம் அந்நியமாகா
போட்டிட்ட கொளுக்கி பூட்டு அப்படியேதான்!

விழிப்பு எனும் நாக்கினை தொட்டால்
பூட்டுக்கள் தானே புணரா உடையும்
திறப்பதை மறைத்து ஒழித்து ஒழிந்து கொண்டால்
தலைமுறை தேடல் தொடராய் தொடரும்!

காலங் காலமாய் உறுதி கொடுத்து
தக்கிட வைத்து தகமை தொலைத்து
தடவலில் கையாயிருக்கும் இரும்பை
ஓங்கியடித்திடின் அதிரும் ஆமப் பூட்டும்
உடைந்து நொருக்கி வெளிப்படும் மாற்றம்
மாற்றத்தின் திறவுகோல் !

அதோ மாற்றத்தின் திறவுகோல்..மாதிரி
சாவிகள் வேண்டியதே இல்லை !
கோசல்யா சொர்ணலிங்கம்
ஜேர்மனி..

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading