க.குமரன் 19.1.23

வியாழன் கவி
ஆக்கம் 101

பெருகிடும் வலிமை
பெற்றுயர தடையேது !?

பெருகிடும் வலிமை
பெற்றிடும் திறன்கள்
வழி சரி என்பின்
விளைச்சலாகுமே!

பெருகிடும் வலிமை
பெற்றிடும். தவறுகள
வழி பிழைக்கின்
தருசகளாகுமே!

சுதந்திர உலகில்
தூய சிந்தனைக்கு
வறுமை!!
சுய நலங்கள்
வென்றிட
பெற்றிடுமா மகிழ்வை?

அன்பதை வழியாக்கி
அறிவதை. சீராக்கி
ஆண்டும் செங்கோல்
வாழ்வின் வழியை
பெற்றுயர தடையேது!?

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் _ 217 "உறைபனி" பூம்பனி பூத்திருக்கு பாத்திருக்க மலருது பார்வைக்கு அழகு பாலரின் மனதுக்கு மகிழ்வு! காடுகள்...

    Continue reading