10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
க.குமரன்
சந்தம் சிந்தும்
வாரம் 242
நீரழிவு
காதல் என்னும் இனிய தேவதையை
உன் உதிரத்தில்
கண்டேன் என்றாள் வைத்தியர்
கனப் பொழுதும்
நீ அசந்தால்
காவியமாவாள்
உன்னிடம் என்றார்!
தித்திப்பை நாவில் எடு
திகட்டும் கசப்பை அவளுக்கு
கொடு என்றார்!…
அச்சம் சில நாள் என்றாலும்
அவள் என்னை வசப்படுத்தினாள்
நித்தம் என்னில் வளர்ந்து
நிதம் என்னை குழைக்கின்றாள்
சின்னா பின்னப்படுத்தி!.!
உன்னில் நான் பாதி
உன் இதயத்தை ஸ்தம்பிக்க
வைக்கவா?
என்கின்றாள் சாகசக்காரி!
வயிற்றில் குத்தி குத்தி
தடுக்க பார்க்கின்றேன்
அவள் காதலை!
கும்பிடு போடுகின்றேன்
என்னை விட்டு விடு என்று!
கோபம் கொள்கின்றாள்
என் சலரோக தேவதை!
அவள் காதல் என் தேகத்தில்
ஏகமும் அவள் வசமாக!…..
😔
க.குமரன்
யேர்மனி

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...