“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் —171

இல்லாமை
இயலாமை
தொற்றுவித்த
எதிர்ப்பு அலை

சொல் கொண்டு
சூழ் யுரைத்து
வீழ்த்த வந்த
தவிப்பு வலை

அலையலையாய்
மனிதங்கள்
அவை யேண்ணும்
ஏக்க வலை

வெல்லுமிந்த
மனித சக்தி
வேகமாக பரவும்
கொதிப்பு வலை

ஏற்று
ஏதிர்த்து
நிற்குமா
கொடுங்கோலை !!!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan