க.குமரன் 9.3.23

வியாழன் கவி
ஆக்கம் 104

வாழ்ந்தோரை போற்றுவோம்

மதி கொண்டு
வரைந்த
விதி சொன்ன
பாதை

நிலை இன்று
விதி மாறி
தடை போகின்ற
வேளை

ஒரு வார்த்தை
பிழைத்தின்று
மறு வார்த்தையாக
மாறி

சுடு வார்த்தை
பரிமாறி
மனம் கொதிக்கின்ற
போது. !

நிதம் உண்மை
வெல்லும் என்று
நீறு பூத்து
நின்று!

கடல் வானம்
மறைகின்ற
கதிரவன் போல
இன்று!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading