புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

சக்திதாசன்

பெளர்ணமியாய் பொழிந்தது
அமாவாசையாய் மறைந்தது
கனவலைகளாய் இனித்தவை
நினைவலைகளில் கலைந்தவை

எண்ணங்கள் கரும்பெனவும்
உண்மைகள் வேம்பெனவும்
துடித்திட்ட இளமைதனிலே
துவண்டிட்ட உணர்வுகளே !

பார்க்காத பார்வைகளினுள்ளே
பூக்காத புதுவசந்தப்புன்னகை
விரியாத அரும்பொன்றினுள்
விதையாகிய வர்ணங்கள்

காதலென்னும் கானலொன்றில்
காத்திருக்குமொரு மீனவனாய்
நேற்றடித்த காற்றலையிலகப்பட்ட
நேசமலரின் இதழ்க்கூட்டம்

பூட்டிவைத்த பொற்கிழியாய்
மூடிவைத்த ஆசையலைகள்
பசிதீர்க்கா. பொருளொன்றின்
பயனற்ற வெறும்சாத்திரங்கள்

கால்களுண்டு நடப்பதற்கங்கே
காணவில்லை.பாதையென்பேன்
காலமென்னும் தோணியிலேறி
கடக்கின்ற யாத்திரையன்றோ

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading