03
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-07-2025
வர்ண வர்ணப் பூக்கள்
வாசம் மிகுந்த பூக்கள்
கண்ணில் காண குளிர்ச்சி...
03
Jul
வர்ண வர்ண பூக்களே!
நகுலா சிவநாதன்
வர்ண வர்ண பூக்களே!
புதுமை படைக்கும் நற்பூக்கள்
புனிதம் நிறைக்கும் நன்மலர்கள்!
அழகு வண்ண நிறமுடனே!
அழகாய்...
02
Jul
வண்ண வண்ணப் பூக்கள்…..
ரஜனி அன்ரன் (B.A) “ வண்ண வண்ணப் பூக்கள் “ 03.07.2025
பூமித்தாயின்...
சக்திதாசன்
இயற்கை————தவழ்ந்தோடும் மேகங்கள்
நீலவான முன்றலில்
கலைந்தோடிக் கரைவதும்
மீண்டும் இணைவதும்
வெண்முகிலின் சிரிப்பிலே
சீறுமாதவன் ஒளிக்கீற்று
கருமுகில்களின் அழுகையில்
மழைச்சாரலாய்ப் பொழிவதும்
இயற்கை நியதிகள்
எழுதப்படாத விதிகளே !
காலைமுதல் மாலைவரை
பறந்தோடும் பறவைகள்
மாலைநேர மயக்குபொழுதில்
மதுரமாகப் பேசிடும் மொழிகள்
கேட்கக்கேட்க இனிக்குது
தேன்சுவையாய்ப் பொழியுது
மானிடராய்ப் பிறந்தும்
மனிதத்தைமறந்தோம்
சுயத்தினை தேடும்
சுகத்தினை அறிவோம்
எமக்குள் உறைந்திடும்
எளிமையில் வதியும்
ஏற்றமிகு ஆன்மாவை
ஏற்றிடுவோம் இறைவனாக
மாறிடும் உலகத்தில்
மாற்றமே மாறாதது
மாற்றத்தின் வடிவமாய்
மாறாமல் ஆன்மாவே
அனைத்தும் ஒன்றாய்
அனைவரும் சமமென
அறிவினை உணர்ந்திட
ஆன்மாவை அறிந்திடு
எமக்குள் மூழ்கிடுவோம்
எம்மைத் தேடிடுவோம்
எல்லாம் எமக்குள்ளே
என்பதைப் புரிந்திடுவோம்
சக்தி சக்திதாசன்

Author: Nada Mohan
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...