பாசத்தின் பகிர்வினிலே

பாசத்தின் பகிர்வினிலே பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே வாசமுல்லை விரிந்தது...

Continue reading

பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு290
விருப்ப தலைப்பு
“மலரும் பூ”

மலர்களின் பேச்சு
மயக்குது மனதை
எத்தனை வர்ணங்கள்
ஏதேதோ பாஷைகள்

கண்களை மூடிக்
கவிதையைத் தேடி
மலர்களைப் பார்த்தேன்
மங்கையின் வதனம்

நிஜங்களை மறந்தே
நிழல்களில் மறைந்தே
செடிகளின் இதழ்களில்
செந்தமிழ் மலர்களே

பூங்கொடி என்றவர்
போற்றினர் பெண்களை
பூக்களின் மென்மையை
பூவையர் கொண்டதால்

கம்பனின் கனவினில்
கண்ணதாசன் கற்பனையில்
வாலியின் இளமையில்
வலம்வரும் மலர்களே

வலம் வரும் பூவினம்
வீசிடும் நறுமணம்
வார்த்தைகள் இல்லையே
வரித்திட மலர்களை

அரும்பிடும் போதிலும்
அழகாய்க் குமிந்திடும்
விரிந்திடும் வேளையில்
விளைந்திடும் ஒலியலை

பாரதி கண்ட கவிநயம்
பாரினில் மலர்ந்திடும்
மலர்களின் பேச்சென்று
மகிழ்ச்சியில் மனதின்று

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading