” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு290
விருப்ப தலைப்பு
“மலரும் பூ”

மலர்களின் பேச்சு
மயக்குது மனதை
எத்தனை வர்ணங்கள்
ஏதேதோ பாஷைகள்

கண்களை மூடிக்
கவிதையைத் தேடி
மலர்களைப் பார்த்தேன்
மங்கையின் வதனம்

நிஜங்களை மறந்தே
நிழல்களில் மறைந்தே
செடிகளின் இதழ்களில்
செந்தமிழ் மலர்களே

பூங்கொடி என்றவர்
போற்றினர் பெண்களை
பூக்களின் மென்மையை
பூவையர் கொண்டதால்

கம்பனின் கனவினில்
கண்ணதாசன் கற்பனையில்
வாலியின் இளமையில்
வலம்வரும் மலர்களே

வலம் வரும் பூவினம்
வீசிடும் நறுமணம்
வார்த்தைகள் இல்லையே
வரித்திட மலர்களை

அரும்பிடும் போதிலும்
அழகாய்க் குமிந்திடும்
விரிந்திடும் வேளையில்
விளைந்திடும் ஒலியலை

பாரதி கண்ட கவிநயம்
பாரினில் மலர்ந்திடும்
மலர்களின் பேச்சென்று
மகிழ்ச்சியில் மனதின்று

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan