கணப்பொழுதில்

கணப்பொழுதில்.. சிவருபன் சர்வேஸ்வரி கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி முடிக்கும் காரியம் தெரியாதவர்...

Continue reading

சக்தி சக்திதாசன்

பாமுகத்தின் கவித் தோட்டத்திலே
பூச்சொரியும் கவிச் சந்தத்திலே
தேனுறும் இனியதோர் மாலையிலே
தெளிக்கின்றார் கவித் துளிகளையே

கவிப்பூக்கள் தொடுத்தொரு மாலை
கட்டிடும் பொன்னானதிந்த மாலையிலே
கற்கண்டின் தித்திப்பினை ஈந்திடும்
கவிச்சொந்தங்கள் மத்தியில் மயக்கமிது

அன்னைத் தமிழின் வனப்பினை
அழகாய்க் கூட்டி யாத்திடுகின்றார்
அன்புச் சொந்தங்கள் இத்தளத்தில்
அடியேனுக்கு வாய்த்ததொரு வாய்ப்பு

இனித்திடும் மொழியாம் எம்தமிழ்
இகத்தினில் இதுபோல் இன்னுமில்லை
ஈன்றதெம்நாடு இத்தகை கவிஞரை
இயற்றிடும் கவிதைகள் அற்புதமே

வாழிய அனைவரும் தமிழ்போல
வார்த்திடுங்கள் கவிதை வாழும்வரை
வான்புகழ் பெற்றிடுவாள் தமிழன்னை
வந்தனம் செய்வேன் உங்களனைவரையும்

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் செல்லாக்காசு புவனத்தில் பலநாட்டின் நாணய மதிப்பு புழங்கிடும் பல்வேறு நாமத்தின் சிறப்பு பலநாட்டின் பணத்தால் பாரிய விரிசல் பதுக்கிய...

    Continue reading