சக்தி சக்திதாசன்

தித்திக்கும் சுவை கொண்டு
எத்திக்கும் சிறந்திருக்கும்
முத்திக்கு அப்பாலும் வாழும்
நித்திய மொழி தமிழென்பேன்

மோதி நெஞ்சில் துயரம்
மீறி நிற்கும் வேளைகளில்
கூடி நாலு சொற் கூட்டி கவிதை
பாடி முடித்தால் அமைதியங்கே

எங்கு நான் என்று பிறந்தாலும்
அன்று ஒரு தமிழ்த்தாயில் கருவாக
மீண்டும் உருவாக வேண்டுமென்று
வேண்டி நிற்கும் பொழுதிதுவே

தாய்மொழியின் பெருமையினை நானும்
கண்டு கொண்ட பொழுது தன்னில்
பாதி வாழ்வு முடிந்து போயிற்று என
பாழும் மனது வாடுது இன்று

சிந்தனை எனும் ஊற்றில் ஊறும்
விந்தைகள் நிறைந்த தமிழில்
முந்தைய வாழ்வின் நிகழ்வால்
பிந்தைய அனுபவப் பிதற்றல்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading