10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
சக்தி சக்திதாசன்
தித்திக்கும் சுவை கொண்டு
எத்திக்கும் சிறந்திருக்கும்
முத்திக்கு அப்பாலும் வாழும்
நித்திய மொழி தமிழென்பேன்
மோதி நெஞ்சில் துயரம்
மீறி நிற்கும் வேளைகளில்
கூடி நாலு சொற் கூட்டி கவிதை
பாடி முடித்தால் அமைதியங்கே
எங்கு நான் என்று பிறந்தாலும்
அன்று ஒரு தமிழ்த்தாயில் கருவாக
மீண்டும் உருவாக வேண்டுமென்று
வேண்டி நிற்கும் பொழுதிதுவே
தாய்மொழியின் பெருமையினை நானும்
கண்டு கொண்ட பொழுது தன்னில்
பாதி வாழ்வு முடிந்து போயிற்று என
பாழும் மனது வாடுது இன்று
சிந்தனை எனும் ஊற்றில் ஊறும்
விந்தைகள் நிறைந்த தமிழில்
முந்தைய வாழ்வின் நிகழ்வால்
பிந்தைய அனுபவப் பிதற்றல்

Author: Nada Mohan
16
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
22-07-2025
அடுத்தவர் பொருள் மீது
ஆசை கொள்ளும் மனம்
இவர்கள் உழைப்பினை
அலட்சியமாக்கும் தினம்
ஆடம்பரத்திற்காய்...
16
Jul
வணக்கம்
இசை..
ஞாலக்குன்றில் இசை
நமக்கென கிடைத்த கொடை
அகத்தின் ஆளும் திறனில்
ஆற்றுப்படுத்தும் மருந்தே
இசை ஈர்ப்பில் பலர்
இதயம் கவர்ந்த...
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...