வரமானதோ வயோதிபம்

௨௫கி வடிந்த மெழுகாக வாழ்ந்து முடித்த மௌனம் முடங்கிக் கிடக்கும் வாலிபம் முடக்காது துடிக்கும் அனுபவம் ஆளுமையான ப௫வம் அனுபவம்...

Continue reading

வரமானதோ வாயோதிபம்

ஜெயம் தள்ளாமையோடு உடம்புக்கு முடியாமையும் சேரும் அரவணைக்க யாருமில்லா முதியோர்நிலை பாவம் புயலின் நடுவே சிக்கியே மிதப்பு கடலிலும்...

Continue reading

சக்தி சக்திதாசன்

கதையொன்று சொல்லவா ?
கவிதையொன்று புனையவா ?
காணாத பல காட்சி புவியில்
கண்டு வந்த காரணத்தால் , , , , 

நிஜமென்று ஒன்றுமில்லை
நிழலென்று பிறந்த பின்னால்
முடிவென்று ஒன்றுமில்லை
முற்றுப்புள்ளி ஆனதினால்

விதையாகி விழுந்திருந்தால்
விருட்சமாய் எழுந்திடலாம்
கனியாக திரண்டிருந்தால்
பசிதீர்க்கும் வழியாகலாம்

கருமுகிலாய் குவிந்திருந்தால்
கனமழையாய்ப் பொழிந்திடலாம்
காற்றாகத் தவழ்ந்திருந்தால்
சில்லென்னும் உணர்வாகலாம்

சிப்பிக்குள் துளிர்த்திருந்தால்
முத்தாகி மிளிர்ந்திடலாம்
சேற்றினுள் பூத்திருந்தால்
செந்தாமரையாய் மலர்ந்திடலாம்

நினைவெல்லாம் கனவாகியே
கனவெல்லாம் கதையாகியோர்
விலையில்லா விவேகத்தை
விளைவாகக் கொண்டதிங்கே

சொற்களினுள் புதைந்திருக்கும்
சொற்செல்வச் செழிப்புக்கொண்டு
சொல்லுகின்ற கவிதைகளினுள்
சொற்சிலம்பம் ஆடுகின்றேன்

பாழுமிந்த உலகினிலே
பாவங்களின் மத்தியிலே
மனிதனாய்ப் பிறந்ததினால்
மனதிலெழும் கவிதைகளே !

புவியிந்தப்பெரும் ஆழியில்
புலர்ந்ததிந்த வாழ்க்கைப்படகு
புதிரானப் பயணமிது
பார்ப்பதெல்லாம் நாடகமே !

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading