காற்பந்துத் திருவிழா…..

ரஜனி அன்ரன் (B.A) காற்பந்துத் திருவிழா....40 11.06.2026 உலககாற்பந்துத் திருவிழா உலகேகொண்டாடும் பெருவிழா உன்னதமாய் தொடங்குதுஇன்று நான்காண்டிற்கு...

Continue reading

வலிகள்

ராணி சம்பந்தர் வலிகள் கோடை காலம் வந்தும் வாடைக்காற்றோ அதி வேகமாகிட கூடவரும் குளிர் மழைக்கூதலும் சாடையாகப் பனிக்கல் சேரக் கொட்டிக் கொட்டிப் பசி...

Continue reading

இயல்புணர்ந்து இசைந்தெழுவோம்

இரா.விஜயகௌரி கைகட்டி வாய் பொத்தி வைத்ததெல்லாம் சட்டமென்று வரம்பினுள்ளே சிறைப்பறவை எதிர்கூறல் எதுவுமின்றி மௌனமொழி ஆம் தாயகத்து வாழ்முறையில் விழி பேசும்...

Continue reading

சக்தி சக்திதாசன்

பாட்டி சொன்ன கதை
கேட்டு வளர்ந்த மனம்
விட்டுச் சென்ற நினைவு
மீட்டுகின்ற கானம் இது

பாட்டி என்றொரு உருவம்
பார்த்தது அன்றைய பொழுது
போர்த்த சுகந்த உணர்வுகள்
பொங்கும் இந்த வேளையில்

எந்தையும் தாயும் கொண்ட
முந்தைய உறவின் எச்சங்கள்
சிந்தையில் விதைத்த பந்தத்தில்
சிறப்புடை உறவாய் பாட்டியே !

அப்பாவின் அன்னை பாட்டியாய்
அன்றென் வாழ்வினில் கண்டதும்
அவளுடை அன்பின் எல்லைகள்
அளவிளா வகையினில் விரிந்ததே !

அவ்வை என்பதுமொரு பாட்டியே
அன்னைத் தமிழின் தொன்மையில்
ஆண்டாள் என்பதுமெம் பாட்டியே
ஆண்டாள் தமிழை அக்கோதையே !

ஆடையாய் அன்னை தந்தையும்
அணிகலனாய் பாட்டி அழகூட்டுவாள்
அறிவுரை ஆயிரமாய் உரைத்திடுவாள்
அன்புடன் பட்டியெமக்கு கதைகளாய்

பாட்டியின் வைத்தியம் இன்றுமே
பாரினில் வியப்புடன் செயலிலே
பாக்குடன் வெற்றிலை சேர்த்தே
பவித்திரமாய் பாட்டி மென்றிடுவாள்

பாண்டி என்றொரு விளையாட்டு
பாட்டிக்கே வெற்றி என்றுமதில்
பாதுகாப்பாய் அவளின் நினைவுகள்
பெட்டகம்போல் நெஞ்சில் நிறைந்திருக்கே !

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

    Continue reading